Monday, April 16, 2012

பிறக்கப்போகும் குழந்தை ஆணா? இல்லை பெண்ணா?

 பல காலங்களாக மனிதன் பிறப்பு மற்றும் இறப்பையே விதியின் முதன்மை நிகழ்வாக அதாவது மாற்றமுடியாத ஒன்றாக கருதுகின்றான். ஆனால் மெய்ஞானம், விஞ்ஞானம் இரண்டும் பிறப்பு மற்றும் இறப்பை (காலத்தை அல்லது தன்மையை) மாற்றி அமைக்க முடியும் என்று கூறுகின்றன.

பிறப்பு:

* குழந்தை உருவாவது, அது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா, குழந்தை பிறப்பது என்பனவற்றையெல்லாம் நம்மால் நிர்ணியிக்க முடியாது, "எல்லாம் கடவுளின் செயல், எதுவும் விதிப்படிதான் நடக்கும்"
என்று கூறுவது அறியாமையின் செயல்.

மெய்ஞானத்தில்:

அகத்தியர், திருமூலர், சரகர் போன்றோரின் வைத்திய மற்றும் கலை நூல்களிலிருந்து பிறப்பானது நிர்ணியிக்ககூடிய ஒன்றாக, மாற்றக்கூடியதாகவும் நிரூபிக்கப்படுகிறது. மனிதனின் உடலில் ஓடுகின்ற நாடிகளான வாதம், பித்தம், கபம் {சிலோத்துமம்} என்ற மூன்று முக்கிய நாடிகளிலிருந்து மனிதனின் உடலில் ஏற்படும் நோய் முதலான அனைத்து மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடியும். அதில் மகப்பேறுவும் உண்டு.

பெண்ணின் (கர்பமடைந்துள்ள) நாடித்துடிப்பின் மாற்றங்களிலிருந்து அப்பெண் பிள்ளை பெறும் நேரத்தையும், பிள்ளையும், பெண்ணின் உடலின் நிறம் முகமாற்றங்களையும் வைத்து பெண் பெறப்போகும் குழந்தையானது ஆணா? பெண்ணா? குழந்தையின் உடல் நிறம், குணம், உடல்நிலை போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

மேலும் கர்பமாக உள்ள ஒரு பெண்ணானவள் உட்கொள்ளும் உணவின் அளவு, விரும்பும் உணவு வகைகள், சுவாசிக்கும் அளவு மற்றும் முறை.... இன்னும் பலவகையான வழிகளில் அவள் பெறப்போகும் குழந்தையினை வரையறுக்கலாம். இவைகள் அனைத்தும் விஞ்ஞானத்தாலும் நிரூபிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

* அதே போன்று அறியாமனிதர்கள், பணத்தின் காரணமாகவும், பக்தியின் காரணமாகவும், வீணடிக்கும் நேரங்கள் பல ... பிறகு எங்கே இவற்றை அறிந்துகொள்வது?

பல காலங்களாக பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது கடவுளைத்தவிர வேறு எவராலும் நிர்ணியிக்க முடியாத, மாற்ற முடியாத வித்தின்பார் பட்டது என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு ஓன்றிரண்டு பேர் மாற்ற முற்பட்டாலும் இயற்கைக்கு மாறாக, இயற்கைக்கு நியதிகளுக்கு மாறான, எதிரான கண்டுபிடிப்பு இது மனித குலத்திற்கும், பூமிக்கும் அழிவை உண்டாக்கும் என்று குற்றம் சாற்றுகின்றனர்.அப்படிப்பார்த்தால் தற்பொழுது மனிதன் பயன்படுத்திவரும், கண்டுபிடித்துள்ள அனைத்து அறிய கண்டுபிடிப்புகளும் ஏதாவதொரு வகையில் புவியின் நலனுக்கு கேடு விளைவிக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. எப்பொழுதும் ஒரு பொருள் அழியும் போதுதான் மற்றொன்று கண்டறியப்படுகின்றது (ஒன்றின் வழியே மற்றொன்று ) ஒன்று அழியாமல் அதே நிலையில் இருக்க வேண்டுமெனில் மாற்றங்களும், முன்னேற்றங்களும் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும். என்ன சொல்லவருகிறேனென்று புரியவில்லையா!.....

பிறக்கப்போகும் குழந்தை ஆணா? இல்லை பெண்ணா? என்று நம்மால் நிர்ணயிக்க முடியும் என்பதைத்தான் கூறுகின்றேன்.


மெய்ஞானத்தின் வாயிலாக....

பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்றும் வயதையும், குணப்பண்புகளையும் எவ்வாறு நிர்ணயிப்பது என்று திருமூலர் வைத்தியசாரம் தெளிவாக உணர்த்துகிறது. நம் வாழ்விற்கும், ஆயுட்காலத்திற்கும், உயிரோட்ட செயல்பாடுகளுக்கும், உடல் வளர்ச்சிக்கும், இப்புவியில் உயிரினம் தோன்ற மூலகாரணமாயிருந்த காற்றும், அதனை நாம் சுவாசிக்கும் முறைகளும், மேற்கூறியவற்றை நிர்ணயிக்கின்றன.

இதனடிப்படையில் .....

*ஆண் /பெண் பிறப்பு (ஆண்களுக்கானது ):
மணமான ஆணும், பெண்ணும் கூடும்பொழுது கணவருடைய சுவாசம் மூக்கின் வலப்பக்கமாக (பிங்கலை ) நடந்தால் ஆண் குழந்தையையும், இடப்பக்கமாக நடந்தால் (இடகலை ) பெண்குழந்தையையும், இரண்டு பக்க மூக்கின் வழியாகவும் நடந்தால் குழந்தையானது அலி (திருநங்கை) தன்மையுடையதாகவும் தம்பதியர் பெறுவர். அதாவது நாம் சுவாசிக்கும் காற்றானது வாரத்தின் 3 நாட்கள் இடது மூக்கின் வழியாகவும், 3 நாட்கள் வலது மூக்கின் வழியாகவும், ஒரு நாள் இரண்டு மூக்கின் வழியாகவும் சுவாசம் நடைபெறும். இதை அறிந்து
கொள்வதில்தான் சூட்சமம் இருக்கின்றது.


விஞ்ஞானத்தின் வாயிலாக ...

தற்பொழுது மனிதன் விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக உள்நோக்கி -பொருட்கள் -கட்டமைப்பு -அணுக்கள் மூலக்கூறுகள் வரிசையிலும், வெளிப்புறம் நோக்கி - கோள்கள் -சூரியகுடும்பம் -அண்டம் -பேரண்டம் பிரபஞ்சம் என்ற வரிசையிலும் வெளிக்கொணர்ந்த ஆய்வுகள் எண்ணற்றவை, அதில் ஒரு சிறு புள்ளிதான் உயிரின் படைப்பு பற்றிய ஆய்வு. அந்த ஆய்வுதான் நம்மை டெஸ்ட்டியூப் பேபி, குளோனிங், DNA Map Analysis, போன்றவற்றை அறிய செய்துள்ளன.

நவீன அறிவியல் விஞ்ஞானத்தின்படி ஒரு ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது அந்த ஆணினால் அளிக்கப்படும் விந்தணுக்கள் சரியான முதிர்ந்த நிலையிலுள்ள பெண்ணின் கருமுட்டையை அடைந்து ஒரே ஒரு ஆற்றல் வாய்ந்த விந்தணு மட்டும் கருமுட்டையை துளைத்து சென்று கருத்தரிக்கின்றது. மற்றவை அளிந்துவிடுகின்றன. இது விரையாக சுருக்கமாக கூறப்பட்டாலும் இவற்றினிடைய பல்வேறு மாற்றங்கள் நிகழும், நமது விஞ்ஞானமும் உடலுறவின் போது (ஆண் ) கணவன்,மனைவின் உடல் நலம், மனநலம் பேணுதல், அவற்றினால் ஏற்படும் விளைவுகளைவும், மாற்றங்களையும் தெளிவாக விவரிக்கின்றது. கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் செயல்பாடுகள், உணவு முறைகளும் குழந்தை பிறப்பு மற்றும் அதன் உடல் நலனில் ஏற்படுத்தும் மாற்றங்களை தெளிவாக விளக்குகிறது. மனித உடலுள்ள இனப்பெருக்க அணுக்களில் உள்ள க்ரோமொசொம்கல்தான் பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணியிக்கின்றன.

அதாவது ஆணின் விந்தணுவில் உள்ள X குரோமோசோம், பெண்ணின் அண்ட அணுக்களில் உள்ள X குரோமோசோமுடன் X-X அல்லது Y-Y என்ற வகையில் X-X / Y-Y என்று இணைந்தால் பிறக்கப்போகும் குழந்தை ஆணாகவும், அதை விடுத்து 
X-Y என்று இணைந்தால் குழந்தை பெண்ணாகவும், (23X-23X) / (23Y-23Y)/(23X-23Y) என்று இணையாமல் தவறு ஏற்படுமாயின் பிறக்கும் குழந்தை திருநங்கையாகவோ, அங்ககீனத்துடனோ பிறக்கும் என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது.

* ஒரு உயிரின் ஜீன் குரோமோசோம் அணுக்களிலிருந்து அந்த உயிரின் அசலாக அதே தோற்றம், செயல்பாடு, குணாதிசயங்கள் கொண்ட மற்றொரு உயிரினத்தை குளோனிங் முறை மூலம் உருவாக்கப்படுகிறது !

* ஆண் இனத்தின் விந்தணுச் செல்களை, பெண் இனத்தின் அண்ட அணு கரு முட்டைகளை சோதனைச் சாலையில் செயற்கையாக கருவுறச்செய்து பெண் இன உயிரினத்தின் கர்ப்பப் பையினுள் வைத்து வளரச் செய்து டெஸ்ட் டியூப் முறை மூலம் செயற்கை இனப் பெருக்கத்தின் மூலம் உயிரினம் தோற்றுவிக்கப்படுகிறது.


* குளோனிங் முறை பல்வேறு நாடுகள், அறிஞர்களால் எதிர்க்கப்பட்டாலும், மறைமுகமாக நன்மை பயக்கும் வகையிலும், தீமை பயக்கும் வகையிலும் பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

* ஒரு உயிரினத்தை தோற்றுவிப்பதில் இவ்வளவு மருத்துவ விஞ்ஞான முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் மனித உயிரணுக் குரோமோசோம்களைக் கொண்டு ஆண் குழந்தை வேண்டுமென்றால் ஆண் குழந்தையையும், பெண் குழந்தை வேண்டுமென்றால் பெண் குழந்தையையும் பெறுவது என்பது சாத்தியமே!

* ஆண் மற்றும் பெண்ணினத்தின் இனப்பெருக்க உயிரணுக்களை இணைத்து செயற்கை முறையில் கருத்தரிக்க செய்யும்போது நமக்கு தேவையானபடி ஆணின் (Y)/X
 குரோமொசொம்களாக பிரிக்கப்பட்ட உயிரணுக்களை பெண்ணினத்தின் (Y)/X குரோமோசோம்களாக பகுக்கப்பட்ட உயிரணுக்களுடன் கருவுறச்செய்து ஆண் குழந்தையையும், அதேபோன்று (X-Y) என்ற முறையில் இணைத்து பெண் குழந்தையையும் பெறமுடியும் என்பது சாத்தியம்தான்!


அனால் நடைமுறையில் இன்றைய நிலையில்  மனிதன் இவற்றை தெரிந்துகொண்டுவிட்டால் பெண்குழந்தையே பெற்றுக்கொள்ளமாட்டான் என்பதாலேயே விஞ்ஞானம் ஆணா? பெண்ணா? என்பதை வெளியிட மறுக்கிறது. இதுவும் நம் நன்மைக்காகவே. விஞ்ஞான வளர்ச்சி என்பது மனித குலத்தின் நன்மைக்காகவே!
 

No comments:

Post a Comment