Friday, September 28, 2012

தெற்கு ரயில்வேயில் வேலை


சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வே மற்றும் சென்னை இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் காலியாக உள்ள 2,461 காலிப்பணியிடங்களில், பல்வேறு பணிகளில் சேர விரும்பும் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வேயில் ஸ்வீப்பர்  கம் போர்ட்டர், டிராக்மேன், ஹெல்பர் கிரேடு 2 (எலெக்ட்ரிக்கல்), ஹெல்பர் கிரேடு 2 (மெக்கானிக்கல் ), ஹெல்பர் கிரேடு 2 (சிக்னல் அண்ட் தொலைத்தொடர்பு), ஹெல்பர் கிரேடு 2 (ஸ்டோர்ஸ்), உதவியாளர்கள் (அனைத்துப் பிரிவுகளுக்கும்), மருத்துவப் பிரிவிற்கு சஃபைவாலா போன்ற பிரிவுகளிலும், இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் டிராக்மேன், ஹெல்பர் கிரேடு , வெண்டர், பியூன், சானிட்டரி கிளீனர் போன்ற பிரிவுகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

இந்தப் பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தப் பணியில் சேர விரும்பும் நபர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐ.டி.ஐ. அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். அதிகப்படியான கல்வித் தகுதி உடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பணியாளர்கள் எப்படித் தேர்வு செய்யப் படுவார்கள்?

காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்கள் மட்டும் (அதாவது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் இருந்து மூன்று மடங்கு பேர்) உடற்தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மருத்துவத்  தகுதி சோதனைக்குப் பிறகு காலிப் பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

பெட் (பிசிக்கல் எலிஜிபிலிட்டி டெஸ்ட்) என்று அழைக்கப்படும் இந்த உடற் தகுதித் திறன் தேர்வு ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. ஆண் விண்ணப்பதாரர்களாக இருப்பின் 1,500 மீட்டர் தூரத்தை 6 நிமிடத்தில் ஓடிக் கடக்க வேண்டும். இதற்கு ஒரு வாய்ப்பு மட்டுமே தரப்படும். பெண் விண்ணப்பதாரர்களைப் பொருத்தவரையில் 400 மீட்டர் தூரத்தை 3 நிமிடங்களில் ஓடிக் கடக்க வேண்டும். இதற்கு ஒரு வாய்ப்பு மட்டுமே தரப்படும்.

எழுத்துத் தேர்வு எப்படி இருக்கும்?

எழுத்துத் தேர்வு மொத்தம் 2 மணி நேரம் நடைபெறும்.  கேள்விகள் முற்றிலும் அப்ஜெக்ட்டிவ் முறையில் அமைந்திருக்கும். கேள்விகள் பத்தாம் வகுப்புத் தரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். பொது அறிவு, கணிதம், அனாலிசிஸ், ஆங்கிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 150 கேள்விகள். கேள்வித்தாள் ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் இருக்கும். மாணவர்கள் தங்களுக்கான மொழியை தேர்வு செய்து விடையளிக்கலாம். தவறான கேள்விக்கு நெகட்டிவ் மதிப் பெண்கள் உண்டு. 3 தவறான கேள்விகளுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு வரை ரயில்வே துறை போட்டித் தேர்வு வினாத்தாள்கள்  முற்றிலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியிலேயே இருந்தன. இதனால், தமிழ்வழிக் கல்வியில் படித்து வந்த மாணவர்கள் இந்தக் கேள்விகளைப் புரிந்து விடையளிக்க சிரமப்பட்டே வந்தனர். ஆனால், தற்போது கேள்விகள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருவதால், தமிழ்வழிக் கல்வி படித்தவர்களுக்கு தேர்வு எளிமையாக இருக்கும்.

வயது வரம்பு:

பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 33 வரையிலும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 18 - 36 வரையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 18 முதல் 38 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் கேஷுவல் மற்றும் சப்ஸ்டிட்யூட் தொழிலாளர்கள் உட்பட குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்  பணியாற்றிவரும் தொழிலாளர்கள் பொதுப்பிரிவினராக இருக்கும்பட்சத்தில் 40 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட பிரிவினராக இருக்கும்பட்சத்தில் 43 வயது வரையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகள் 43 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 46 வயது வரையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 48 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம்:

ரூ.40 தேர்வுக்கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. The Assistant  personal officer/ Recruitment, RRC, Chennai – 600008  என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் தேசிய மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியின் கோடிட்ட வரைவோலை அல்லது அஞ்சலகத்திலிருந்து பெறப்பட்ட கோடிட்ட இந்திய அஞ்சல் ஆணை வடிவில் செலுத்த வேண்டும். இந்திய  அஞ்சல் ஆணை அல்லது வங்கி வரைவோலை கண்டிப்பாக தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான போது அல்லது அதற்குப் பிறகு பெறப்பட்டதாக இருக்க வேண்டும். தேர்வு அறிவிப்புக்கு முன்பாக வரைவோலை எடுத்திருப்பின் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும். வங்கி வரைவோலை அல்லது இந்திய அஞ்சல் ஆணையில் பெயருக்கான இடத்தில் மற்றும் காசோலையின் பின்புறம் வேலைவாய்ப்பு அறிவிப்பு எண் மற்றும் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் அஞ்சல் முகவரியை குறிப்பிட வேண்டும்.

மணி ஆர்டர், காசோலை, அஞ்சலகம் வழங்கும் சென்ட்ரல் ரெக்ரூட்மெண்ட் கட்டண ஸ்டாம்பு அல்லது மற்ற எவ்விதமான முறையில் கட்டணம் செலுத்தினாலும் அது நிராகரிக்கப்படும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது எப்படி?

ஒரு விண்ணப்பதாரர்  ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர் பல விண்ணப்பங்களை அனுப்பினால் அது ஏற்கப்படாது. ஒருவேளை பல விண்ணப்பங்கள் அனுப்பி, ஒரு விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், இந்த ஒரு காரணத்திற்காக பணி நியமனம் செய்யப்படாமல் போகலாம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். விண்ணப்பதாரர் தங்கள் விண்ணப்பப் படிவத்தை நீலநிற அல்லது கறுப்பு நிற பால் பாயிண்ட் பேனாவால் மட்டுமே நிரப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் பெயர், பின்கோடுடன் கூடிய முகவரி, பிறந்த நாள், தந்தையின் பெயர் மற்றும் அருகாமையிலுள்ள ரயில் நிலையம் முதலியவற்றை கேப்பிட்டல் எழுத்துக்களில் எழுத வேண்டும்.

விண்ணப்பதாரர் தங்கள் உடலிலுள்ள ஏதாவது கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும் அடையாளம் பற்றி குறிப்பிட்டிருக்க வேண்டும். அடையாளம் பற்றிக் குறிப்பிடும் பத்தியை தெளிவாகப் பூர்த்தி செய்யாமல் விடும் விண்ணப்பதாரரின் விண்ணப்பப் படிவம் நிராகரிக்கப்படும். தெளிவில்லாத, சரியாகப் பூர்த்தி செய்யாத, கையொப்பம் போடப்படாத, தகுந்த வடிவத்தில் இல்லாத, புகைப்படம் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவை:

விண்ணப்பத்துடன் பிறந்த தேதி சான்றின் நகல், கல்வித் தகுதிக்கான நகல், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிள் சாதிச் சான்றிதழின் நகல், முன்னாள் ராணுவத்தினராக இருந்தால் பணிவிடுப்புச் சான்றிதழின் நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை தெற்கு ரயில்வே இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்துகொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியைப் பெற்று அரசு வேலையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மாணவர்கள், அரசு வேலைவாய்ப்பிற்காக ஆண்டுக்கணக்காக போட்டித் தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்கள், மத்திய அரசுத் துறைகளின் ஒரு முக்கிய அங்கமான ரயில்வே துறையில் பணியில் சேர விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 25-09-2012
விவரங்களுக்கு : www.rrcchenai.org.in

Wednesday, June 6, 2012

மனித உடல் பற்றி


  • ஆண்களின் கண் இமை துடிப்பினை விடவும் இரட்டிமடங்கு வேகத்தில் (தடவை) பெண்களின் கண் இமை துடிக்கின்றது.
  • பெண்களின் தலைமுடி ஆண்களின் முடியை விடவும் மெல்லியனவாம்.
  • அறிவாற்றல் கூடியவர் தலைமுடியில் அதிக செம்பு, நாகம் உலோகங்கள் அதிகமாக இருப்பது அறியப்பட்டுள்ளது.
  • சாதாரண மனிதனின் உயரம் காலையில் இருந்ததை விடவும் மாலையில் 1 cmகுறைவாக இருக்குமாம்.(இது மூட்டு பகுதிகளில் காணப்படும் இடைவெளி அமுக்கம் காரணமாக இல்லாது போவது இதற்கு காரணமா சொல்லப்படுகின்றது.)
  • மனிதனின் கண் இமையில் அண்ணளவாக 550 முடிகள் (மயிர்கள்) உள்ளன.
  • மனித உடம்பில் நாக்கிலுள்ள தசைகள் தான் தசைகளில் மிகவும் பலம் வாய்ந்தவை.
  • எமது நாக்கில் உள்ள சுவை உணரிகள் 10 நாட்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கிறன.
  • வீடுகளில் காணப்படும் தூசியின் பெரும் பகுதி மனித உடலில் இருந்து புறப்பட்ட இறந்த தோல்களாகும்.
  • எமது உடம்பில் ஒரு செக்கன் காலத்தில் 15 மில்லியன் இரத்த சிவப்பு கலங்கள் அழிக்கப்பட்டும் உருவாக்கப்பட்டும் வருகின்றது.
  • ஒரு சாதாரண மனிதனின் உடலில் வாழ் நாளில் 10,000 கலன் உமிள்நீர் உற்பத்தியாகின்றது.
  • அதிக கரற் (Carrots) உண்டதன் பின்னர் மனித தோலின் நிறம் வெழுப்பாக (கரற் நிறத்தினை ஒத்ததாக) மாறுகின்றதாம்.
  • சராசரி மனிதர் ஒரு வருடத்தில் 10 மில்லியன் தடவை சுவாசிக்கின்றனர்.
  • மனித கையின் நடுவிரலின் நகங்கள் மிக வேகமாக வழர்கின்றன. சுட்டு விரல் தான் விரல்களிலேயெ உணர்சிகளை அதிகம் உணரவல்லது.
  • மனித உடலின் மொத்த எடை மனித மூலையை விட 40 மடங்கு பெரியது.
  • மனித எலும்புகளில் மிகவும் பலம் மிக்கது தாடை (முகப்பகுதி) எலும்புகளாகும்.
  • உடல் உறுப்புகளிலேயே கண் மட்டும் தான் பிறந்தவுடன் உள்ள அதே அளவில் எப்போதும் உள்ளது , மற்றய எல்லா உறுப்புகளும் வளர்ச்சியுடன் தொடர்ந்து மாறுபடுகின்றன.

Wednesday, May 30, 2012

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் !


பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தன. இவர்கள் உடல் சிறப்பாக இயங்கியது. பழைய விஷயங்களைக்கூட இவர்கள் சரியாக ஞாபகப்படுத்தி சொன்னார்கள்.
ஆனால் பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் அநியாயத்திற்கு மறதிக்கு பெயர் போனவர்களாக இருந்தார்கள். பல விஷயங்கள் இவர்களது ஞாபகத்திற்கு வரவில்லை. வீட்டைச் சரியாகப் பூட்டினோமோ? என்று பஸ்ஸில் ஏறிய பிறகு சந்தேகத்துடன் பயணிப்பார்கள். மனக்குழப்பம் தெளிவின்மையும் இவர்களிடம் அதிகம்.
பிரிட்டீஷ் விஞ்ஞானிகளால் பி வைட்டமின்களுக்கும் ஞாபக சக்திக்கும் என்ன தொடர்பு என்று கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் ‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு தடையின்றி நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் படு சுறுசுறுப்பாக இயங்கும்.
கோழி சூப்பால் நன்மை உண்டா ?
ஜலதோஷ நேரத்தில் கோழி சூப் ஆட்டுக்கால் சூப் அல்லது சிறிய துண்டு கோழி இறைச்சி சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இது உண்மையா? அறிவியல் ரீதியாக உண்மை. இவைகளில் உள்ள துத்தநாக உப்பு நன்மை செய்கிறது.
கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்யலாமா?
உடற்பயிற்சி செய்யும் கர்ப்பிணி பெண்கள் உடற்பயிற்சி செய்யாத கர்ப்பிணிகளை விட நல்ல வெயிட்டான குழந்தைகளைப் பெறுகின்றனர். உடற்பயிற்சியினால் வாரத்திற்கு 2000 கலோரி எரிக்கப்படுகிறது. இந்தப் பெண்கள் பிரசவ தேதி குறிப்பிட்ட தினத்தன்றே சிரமம் இன்றி எளிதாகக் குழந்தையை பிரசவித்தும் விடுகின்றனர். குழந்தையும் படு ஆரோக்கியமாக உள்ளது. மிக்ஸிகன் ஸ்டேட் பல்கலைக்கழகம் இது பற்றிய ஆய்வில் தீவிரமாக இப்போது இறங்கியுள்ளது. புது மணப்பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது.
நீரிழிவு நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா?
சாப்பிடலாம். ஆனால் அரிசி உருளைக்கிழங்கு ரொட்டி போன்றவை என்றால் குறைவாகத்தான் சாப்பிட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் பழங்கள் சாப்பிடும் போது தயிர் ஐஸ்கிரீம் இனிப்பு சர்பத் முதலியன சேர்த்து சாப்பிடக்கூடாது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இதனால் முழுமையான மாவுச்சத்து உணவுப் பட்டியலில் பழங்களைச் சேர்க்கவில்லை.
வண்ணங்களின் நிற வேறுபாடு தெரியாதவர்கள் இரவில் சரியாக நிறங்களைக் கண்டு உணருகிறார்கள். யுனிவர்சிட்டி ஆப் குரோனின்ஜென் இதைக் கண்டறிந்துள்ளது. இந்த டச்சு பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியல் துறை நிற வேறுபாடுகளைத் தெரிந்து கொள்ளமுடியாத 326 மாணவர்களை இருட்டில் பரிசோதித்து இந்த மாணவர்கள் இருட்டான சூழ்நிலையில் பச்சைஇ சிவப்புஇ நீலம் போன்ற நிறமுள்ள பொருட்களை சரியாகச் சுட்டிக் காட்டினார்கள். ஆரம்ப காலத்திலும் இதே போல நிறக்குருடு மக்கள் இருட்டில் தான் சரியான உணவு எது என்பதைத் தேடி எடுத்து (தட்டிலிருந்து) சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீனைத் தவிர்ப்பது நல்லதா?
1. இரத்தக் கொதிப்பைக் குறைக்கிறது. 2. கொழுப்புப் பொருட்கள் இரத்தக் குழாய்களில் தங்கி இருந்தால் ஆக்ஸிஜன் செல்லத்தடை. எனவே குருதிக் குழாய்களில் உள்ள இது போன்ற டெபாஸிட்டுகளை நீக்கி ரிப்பேர் செய்கிறது. 3. இரத்தம் உறைவதை தடுக்கிறது. 4. கல்லீரல் அதிகம் கொழுப்பு உற்பத்தி செய்வதையும் கட்டுப்படுத்துகிறது. 5. கெடுதல் செய்யும் கொலாஸ்டிரலை குறைத்துவிடுகிறது. எனவே அசைவ உணவுக்காரர்கள் மற்ற அசைவ உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு மீனைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

Monday, May 28, 2012

வாழை பழத்தோல்------குடி தண்ணீரை சுத்தமாக்க உதவும்

குடிநீரை சுத்தப்படுத்த இனி பியூரிபையர் தேவையில்லை. வாழைப்பழ தோல் போதும். குடிநீரில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஒப் பயோசின்சியாஸ் நிறுவனத்தின் குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழுவினர் குடிநீரை சுத்தப்படுத்துவது குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதன் விவரம்: இன்று குடிநீராக பயன்படும் தண்ணீர், காரீயம், செம்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் இரசாயன பொருட்களால் மாசடைந்து காணப்படுகின்றது. இத்தகைய நச்சுப் பொருட்கள் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை நீக்குவதற்கு பியூரிபையர் உட்பட பல்வேறு இரசாயன முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றுக்கு செலவு அதிகமாவதுடன், நச்சுத் தன்மை உள்ளதாகவும் இருக்கின்றன.

இந்நிலையில், தேங்காய் நார் மற்றும் கடலை தோல் உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சில்வர் பாத்திரங்கள் மற்றும் தோல் சப்பாத்துக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழ தோலைக் கொண்டும் தண்ணீர் சுத்தப்படுத்தலாம் என்று இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதாவது, தண்ணீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால் போதும், அதில் உள்ள உலோக நச்சுப் பொருட்களை உடனடியாக தன்னகத்தே உறிஞ்சிக்கொள்ளும். எவ்வித இரசாயனப் பொருட்களையும் சேர்க்கத் தேவையில்லை. தண்ணீரை சுத்தப்படுத்துவதில் மற்ற முறைகளைவிட இம்முறை சிறப்பானதாகவும் செலவு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழ தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Sunday, May 27, 2012

இரத்த கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?


இரத்த கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?
    இரத்தக் கொதிப்பு (Hypertension) அல்லது உயர் இரத்த அழுத்தம் என்பது நம் உடலில் உள்ள சிறிய இரத்தக் குழாய்களின் உள் சுவர்கள் இரத்த ஓட்டத்திற்கு எதிராக ஏற்படுத்தும் அதிக அளவு தடையைக் குறிக்கும்.
இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது?
    நாம் நடுத்தர வயதைக் (35 To 40) கடக்கும் போது நம் உடலில் உள்ள சிறிய சுத்த இரத்தக குழாய்கள் (Arterides) விரியும் தன்மையை இழக்கின்றன. மேலும் நமது தவறான உணவுப் பழக்கங்களினால் இரத்தக் குழாய்களின் உட்புறம் படியும் தீங்கு செய்யும் கொழுப்பு வகைகளினால் தடிப்பு ஏற்பட்டு உள் அளவு சுருங்குகிறது. இதனால் இரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைந்து அழுத்தம் அதிகமாகிறது. இந்த நிலையைத் தான் நாம் "இரத்தக் கொதிப்பு" என்று கூறுகிறோம்.
இரத்தக் கொதிப்பு ஒரு வியாதியா?
    இரத்தக் கொதிப்பு என்பது நோயல்ல. ஆனால் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டுபிடித்துத்  தடுக்கவில்லையென்றால் மெதுவாக நமது உடலின் பல்வேறு முக்கிய உறுப்பு மண்டலங்களை பாதித்து, அவற்றில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இரத்தக் கொதிப்பு அமைந்துவிடும்.
இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் காரணங்கள் யாவை?
  1. நாம் உண்ணும் உணவின் தன்மை.
  2. மன அழுத்தம்.
  3. எளிதில் உணர்ச்சி வசப்படுதல்.
  4. புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம்
  5. உடல் எடை அதிகரித்தல்
  6. ஹார்மோன் சுரப்பியில் நிகழும் கோளாறுகள்.
  7. சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள்.
  8. உடற்பயிற்சி இல்லாமல் சோம்பி இருப்பது.
  9. சத்தம் அதிகம் உள்ள இடங்களில் வெகுநாட்கள் குடியிருத்தல்.
  10. பரம்பரைத் தன்மை. (Genetic Predirposition)
இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் யாவை?
    இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் நாம் இன்னும் முழுவதும் அறியவில்லை என்றாலும், சில முக்கிய மோசமான விளைவுகள் இரத்தக் கொதிப்பினால் ஏற்படுகின்றன.
பக்கவாதம் (Stroke)
    இரத்தக் கொதிப்பு அதிகமாகும் போது மூளைக்குச் செல்லும் மெலிதான இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தை தாங்கமுடியாமல் உடைப்பு ஏற்பட்டு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இந்த இரத்தக் கசிவினால் மூளையிலிருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கும் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு கை, கால்களை முடங்கிப் போகும் பொழுது வாதம் (Stroke or paralysis) ஏற்படுகிறது.
பார்வை பறிபோகுதல்(Blindrers)
    விழிக்கோளத்தின் பின்புறம் உள்ள இரத்தக் குழாய்களில், வெடிப்பினால் உண்டாகும் இரத்தக் கசிவு, கண்பார்வை குறைவு மற்றும் குருட்டுத்தன்மை விளைவுகளை உண்டாக்கும்.
சிறுநீரக செயலிழப்பு (Renel Failure)
    இரத்தக் கொதிப்பு இருப்பதே தொ¢யாமல் விட்டுவிட்டால், அது மெல்ல மெல்ல சிறுநீரகத்தைப் பாதித்துவிடும். சிறுநீரகம் வேலை செய்யும் திறன் சிறிது சிறிதாகக் குறைந்து, இறுதியில் சிறுநீரகம் செயலிழந்துவிடும் நிலை (Renel Failure) உண்டாகும், இரத்தக் கொதிப்பினால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று பார்த்தோம். அது போலவே, வேறு காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படும் போது, அது இரத்தக்கொதிப்பை உண்டுபண்ணும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் இரத்தக் கொதிப்பு ஒருவருக்கு நீண்ட காலம் இருக்குமேயானால் அவர் நமது சிறுநீரகங்களின் செயல்திறனையும் பரிசோதித்துக் கொள்ளுதல் அவசியம்.
இதயநோய் மற்றும் மாரடைப்பு (Heart Attack)
    இதயம் தான் இரத்தக் கொதிப்பின் அடுத்த குறி. ஹார்ட் அட்டாக் ஏற்படுத்த இது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இரத்தக் கொதிப்பை வெகுநாட்களாகக் கண்டு கொள்ளாமல் விடுவதால், அந்த அதிக இரத்த அழுத்தத்துக்கு எதிராக பம்பு செய்யும் இதயம் விரிவடைந்து, அதன் செயல்திறன் குறையலாம். இறுதியாக, ஹார்ட் ·பெயிலியர் என்ற நிலையும் வரலாம்.
நமது இரத்த அழுத்தத்தை எப்படி அளப்பது?
    இரத்த அழுத்தத்தின் அளவு பாதரசத்தின் மில்லி மீட்டர் அளவுகளில் அறியப்படுகிறது. இரத்த அழுத்தம் அளக்கப்படும் போது இரண்டு குறியீடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அவை
(1) சிஸ்டாலிக் அழுத்தம்
(2) டயஸ்டாலிக் அழுத்தம்
    முதலில் குறிப்பிட்டிருக்கும் சிஸ்டாலிக் அழுத்தம் இதயம் சுருங்கும் போது இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தை குறிக்கிறது.
    இரண்டாவது அளவான டயஸ்டாலிக் அழுத்தம், இதயம் ரிலாக்ஸாகி பழைய நிலைமைக்கு வரும்போது இரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தத்தைக் குறிக்கிறது.
    ஒரு ஆரோக்கியமான மனிதனின் இரத்த அழுத்தம் 120/80 மி.மீ மெர்க்குறி என்பதாகும். நடுத்தர வயதில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களுக்கு இந்த அளவானது சிறிது மாறுபடும். 139/89 மி.மீ மெர்க்குறி என்னும் அளவு வரை நார்மல் என்றே கூறலாம்.
    140/90 முதல் 160/110 மி.மீ மெர்க்குறி வரை உள்ள அளவுகள் ஓரளவு உயர்ந்த இரத்த அழுத்தத்தைக் குறிக்கும் (Mild To Moderate Hypertension)
    இதற்கு மேல் உள்ள அளவுகள் மிக அதிகமான உயர் இரத்த அழுத்தத்தினைக் குறிக்கும்.
நார்மல்
சிஸ்டாலிக் இரத்த அழுத்தம்
 (மி.மீ மெர்குறி) 130க்கு கீழ்
டயஸ்டாலிக் இரத்த அழுத்தம்
 (மி.மீ மெர்குறி) 85க்கு கீழ்
அதிகபட்ச நார்மல்
130 - 139
85 - 89
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் -1
140 - 159
90 - 99
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் - 2
160 - 179
100 - 109
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் - 3
180 - க்கு மேல்
110 - க்கு மேல்
இரத்தக் கொதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்னென்ன?
    மருந்து உட்கொள்வது மட்டுமின்றி நமது வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்து கொள்வதினாலும் நாம் இரத்தக் கொதிப்பிலிருந்து விடுபடலாம்.
1) உணவில் உப்பு சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளல்:    உப்பு அதிகமாக இருக்கும் பண்டங்களான ஊறுகாய், அப்பளம், கருவாடு, மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் முந்தரி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
2) பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில்     அதிக அளவில் சேர்த்துக் கொள்வது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.
3) மனதை ரிலாக்ஸ் செய்யும் முறைகள்:    யோகா மற்றும் தியானம்(Meditation) ஆகியவற்றை எந்த பரபரப்பும் இன்றி தவறாமல் செய்தால் இரத்தக் கொதிப்பு பெருமளவு குறையும்.
4) உடற்பயிற்சி:    தினமும் தவறாமல் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போவதோ, 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதோ அல்லது நீச்சல் அடிப்பதோ சரியான உடற்பயிற்சி முறைகள். இவை உடற்பருமனையும் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.
5) புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை அறவே நீக்குவதால்    இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
6) தவறாமல் குடும்ப டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுதல்:    நம் நாட்டில் சமீபகாலமாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்குக் கூட இரத்தக் கொதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே 20 லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் வருடத்துக்குக் இரண்டு முறையாவது பா¢சோதனை செய்து கொள்வது அவசியம்.
    40 வயதைக் கடந்தவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, குடும்பரிதியாக உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தங்களை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம்.
    உயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபகாலமாக நம் நாட்டு மக்களில் அநேகம் பேரை பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு எந்த விளைவுகளும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியும் காட்டாமல், ஆபத்தான கட்டத்தை நோக்கி உள்ளே அது பூதாகாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான மனிதராகவே நாம் நடமாடிக் கொண்டிருக்க ஒரு நிலையில் திடீரென்று இரத்தக் கொதிப்பு தன் கோர முகத்தைக் காட்டும் போது, நாம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். இதன் வெளிப்படையான அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக் கொலையாளி (Silent Killer) என்று அழைத்தால் அது மிகையாகாது.
நன்றி :dr.mulrali. MDS


Wednesday, May 2, 2012

தூக்கத்தை தரும் உணவுப்பொருட்கள்


சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.
உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
இந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.
தேநீர்: உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.
அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.
வாழைப்பழம்: மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.
இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.
பால்: பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.
ஓட்ஸ்: நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.
இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.
செர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.

Sunday, April 22, 2012

ரேஷன் கடைகளில் முறைகேடா?பறக்கும் படைக்கு “டயல்’ பண்ணுங்க


தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இவை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கவும், உணவுப் பொருட்கள் பதுக்கலைக் கண்காணிக்கவும் பறக்கும் படை அமைக்கப்பட்டும், முறைகேடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதி ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெற்றால் பறக்கும் படையினருக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கலாம்.
பறக்கும் படை கண்காணிப்பாளர்கள் கைபேசி எண்கள் வருமாறு:
சென்னை கண்காணிப்பாளர் – 9445045601,
சென்னை (வ) கண்காணிப்பாளர்- 9445045602
சென்னை (தெ) கண்காணிப்பாளர் – 9445045603

மாவட்டம் வாரியாக பறக்கும் படை தாசில்தார்களின் கைபேசி எண்கள் வருமாறு:
காஞ்சிபுரம் – 9445045604
திருவள்ளூர் – 9445045605 திருச்சி – 9445045618
வேலூர் – 9445045606 தஞ்சாவூர் – 9445045619
தி.மலை – 9445045607 திருவாரூர் – 9445045620
விழுப்புரம் – 9445045608 நாகை – 9445045621
கடலூர் – 9445045609 புதுகை – 9445045622
தர்மபுரி – 9445045610 திண்டுக்கல் – 9445045623
சேலம் – 9445045611 தேனி – 9445045624
நாமக்கல் – 9445045612 மதுரை -9445045625
ஈரோடு – 9445045613 சிவகங்ககை – 9445045626
கோவை – 9445045614 விருதுநகர் -9445045627
நீலகிரி – 9445045615 ராமநாதபுரம் – 9445045628
கரூர் – 9445045616 தூத்துக்குடி – 9445045629
பெரம்பலூர்- -9445045617 நெல்லை – 9445045630
கன்னியாகுமரி -9445045631 கிருஷ்ணகிரி -9445045632
நன்றி-தினமலர்