Sunday, April 22, 2012

ரேஷன் கடைகளில் முறைகேடா?பறக்கும் படைக்கு “டயல்’ பண்ணுங்க


தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இவை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கவும், உணவுப் பொருட்கள் பதுக்கலைக் கண்காணிக்கவும் பறக்கும் படை அமைக்கப்பட்டும், முறைகேடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதி ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெற்றால் பறக்கும் படையினருக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கலாம்.
பறக்கும் படை கண்காணிப்பாளர்கள் கைபேசி எண்கள் வருமாறு:
சென்னை கண்காணிப்பாளர் – 9445045601,
சென்னை (வ) கண்காணிப்பாளர்- 9445045602
சென்னை (தெ) கண்காணிப்பாளர் – 9445045603

மாவட்டம் வாரியாக பறக்கும் படை தாசில்தார்களின் கைபேசி எண்கள் வருமாறு:
காஞ்சிபுரம் – 9445045604
திருவள்ளூர் – 9445045605 திருச்சி – 9445045618
வேலூர் – 9445045606 தஞ்சாவூர் – 9445045619
தி.மலை – 9445045607 திருவாரூர் – 9445045620
விழுப்புரம் – 9445045608 நாகை – 9445045621
கடலூர் – 9445045609 புதுகை – 9445045622
தர்மபுரி – 9445045610 திண்டுக்கல் – 9445045623
சேலம் – 9445045611 தேனி – 9445045624
நாமக்கல் – 9445045612 மதுரை -9445045625
ஈரோடு – 9445045613 சிவகங்ககை – 9445045626
கோவை – 9445045614 விருதுநகர் -9445045627
நீலகிரி – 9445045615 ராமநாதபுரம் – 9445045628
கரூர் – 9445045616 தூத்துக்குடி – 9445045629
பெரம்பலூர்- -9445045617 நெல்லை – 9445045630
கன்னியாகுமரி -9445045631 கிருஷ்ணகிரி -9445045632
நன்றி-தினமலர்

Monday, April 16, 2012

பிறக்கப்போகும் குழந்தை ஆணா? இல்லை பெண்ணா?

 பல காலங்களாக மனிதன் பிறப்பு மற்றும் இறப்பையே விதியின் முதன்மை நிகழ்வாக அதாவது மாற்றமுடியாத ஒன்றாக கருதுகின்றான். ஆனால் மெய்ஞானம், விஞ்ஞானம் இரண்டும் பிறப்பு மற்றும் இறப்பை (காலத்தை அல்லது தன்மையை) மாற்றி அமைக்க முடியும் என்று கூறுகின்றன.

பிறப்பு:

* குழந்தை உருவாவது, அது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா, குழந்தை பிறப்பது என்பனவற்றையெல்லாம் நம்மால் நிர்ணியிக்க முடியாது, "எல்லாம் கடவுளின் செயல், எதுவும் விதிப்படிதான் நடக்கும்"
என்று கூறுவது அறியாமையின் செயல்.

மெய்ஞானத்தில்:

அகத்தியர், திருமூலர், சரகர் போன்றோரின் வைத்திய மற்றும் கலை நூல்களிலிருந்து பிறப்பானது நிர்ணியிக்ககூடிய ஒன்றாக, மாற்றக்கூடியதாகவும் நிரூபிக்கப்படுகிறது. மனிதனின் உடலில் ஓடுகின்ற நாடிகளான வாதம், பித்தம், கபம் {சிலோத்துமம்} என்ற மூன்று முக்கிய நாடிகளிலிருந்து மனிதனின் உடலில் ஏற்படும் நோய் முதலான அனைத்து மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடியும். அதில் மகப்பேறுவும் உண்டு.

பெண்ணின் (கர்பமடைந்துள்ள) நாடித்துடிப்பின் மாற்றங்களிலிருந்து அப்பெண் பிள்ளை பெறும் நேரத்தையும், பிள்ளையும், பெண்ணின் உடலின் நிறம் முகமாற்றங்களையும் வைத்து பெண் பெறப்போகும் குழந்தையானது ஆணா? பெண்ணா? குழந்தையின் உடல் நிறம், குணம், உடல்நிலை போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

மேலும் கர்பமாக உள்ள ஒரு பெண்ணானவள் உட்கொள்ளும் உணவின் அளவு, விரும்பும் உணவு வகைகள், சுவாசிக்கும் அளவு மற்றும் முறை.... இன்னும் பலவகையான வழிகளில் அவள் பெறப்போகும் குழந்தையினை வரையறுக்கலாம். இவைகள் அனைத்தும் விஞ்ஞானத்தாலும் நிரூபிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

* அதே போன்று அறியாமனிதர்கள், பணத்தின் காரணமாகவும், பக்தியின் காரணமாகவும், வீணடிக்கும் நேரங்கள் பல ... பிறகு எங்கே இவற்றை அறிந்துகொள்வது?

பல காலங்களாக பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது கடவுளைத்தவிர வேறு எவராலும் நிர்ணியிக்க முடியாத, மாற்ற முடியாத வித்தின்பார் பட்டது என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு ஓன்றிரண்டு பேர் மாற்ற முற்பட்டாலும் இயற்கைக்கு மாறாக, இயற்கைக்கு நியதிகளுக்கு மாறான, எதிரான கண்டுபிடிப்பு இது மனித குலத்திற்கும், பூமிக்கும் அழிவை உண்டாக்கும் என்று குற்றம் சாற்றுகின்றனர்.அப்படிப்பார்த்தால் தற்பொழுது மனிதன் பயன்படுத்திவரும், கண்டுபிடித்துள்ள அனைத்து அறிய கண்டுபிடிப்புகளும் ஏதாவதொரு வகையில் புவியின் நலனுக்கு கேடு விளைவிக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. எப்பொழுதும் ஒரு பொருள் அழியும் போதுதான் மற்றொன்று கண்டறியப்படுகின்றது (ஒன்றின் வழியே மற்றொன்று ) ஒன்று அழியாமல் அதே நிலையில் இருக்க வேண்டுமெனில் மாற்றங்களும், முன்னேற்றங்களும் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும். என்ன சொல்லவருகிறேனென்று புரியவில்லையா!.....

பிறக்கப்போகும் குழந்தை ஆணா? இல்லை பெண்ணா? என்று நம்மால் நிர்ணயிக்க முடியும் என்பதைத்தான் கூறுகின்றேன்.


மெய்ஞானத்தின் வாயிலாக....

பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்றும் வயதையும், குணப்பண்புகளையும் எவ்வாறு நிர்ணயிப்பது என்று திருமூலர் வைத்தியசாரம் தெளிவாக உணர்த்துகிறது. நம் வாழ்விற்கும், ஆயுட்காலத்திற்கும், உயிரோட்ட செயல்பாடுகளுக்கும், உடல் வளர்ச்சிக்கும், இப்புவியில் உயிரினம் தோன்ற மூலகாரணமாயிருந்த காற்றும், அதனை நாம் சுவாசிக்கும் முறைகளும், மேற்கூறியவற்றை நிர்ணயிக்கின்றன.

இதனடிப்படையில் .....

*ஆண் /பெண் பிறப்பு (ஆண்களுக்கானது ):
மணமான ஆணும், பெண்ணும் கூடும்பொழுது கணவருடைய சுவாசம் மூக்கின் வலப்பக்கமாக (பிங்கலை ) நடந்தால் ஆண் குழந்தையையும், இடப்பக்கமாக நடந்தால் (இடகலை ) பெண்குழந்தையையும், இரண்டு பக்க மூக்கின் வழியாகவும் நடந்தால் குழந்தையானது அலி (திருநங்கை) தன்மையுடையதாகவும் தம்பதியர் பெறுவர். அதாவது நாம் சுவாசிக்கும் காற்றானது வாரத்தின் 3 நாட்கள் இடது மூக்கின் வழியாகவும், 3 நாட்கள் வலது மூக்கின் வழியாகவும், ஒரு நாள் இரண்டு மூக்கின் வழியாகவும் சுவாசம் நடைபெறும். இதை அறிந்து
கொள்வதில்தான் சூட்சமம் இருக்கின்றது.


விஞ்ஞானத்தின் வாயிலாக ...

தற்பொழுது மனிதன் விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக உள்நோக்கி -பொருட்கள் -கட்டமைப்பு -அணுக்கள் மூலக்கூறுகள் வரிசையிலும், வெளிப்புறம் நோக்கி - கோள்கள் -சூரியகுடும்பம் -அண்டம் -பேரண்டம் பிரபஞ்சம் என்ற வரிசையிலும் வெளிக்கொணர்ந்த ஆய்வுகள் எண்ணற்றவை, அதில் ஒரு சிறு புள்ளிதான் உயிரின் படைப்பு பற்றிய ஆய்வு. அந்த ஆய்வுதான் நம்மை டெஸ்ட்டியூப் பேபி, குளோனிங், DNA Map Analysis, போன்றவற்றை அறிய செய்துள்ளன.

நவீன அறிவியல் விஞ்ஞானத்தின்படி ஒரு ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது அந்த ஆணினால் அளிக்கப்படும் விந்தணுக்கள் சரியான முதிர்ந்த நிலையிலுள்ள பெண்ணின் கருமுட்டையை அடைந்து ஒரே ஒரு ஆற்றல் வாய்ந்த விந்தணு மட்டும் கருமுட்டையை துளைத்து சென்று கருத்தரிக்கின்றது. மற்றவை அளிந்துவிடுகின்றன. இது விரையாக சுருக்கமாக கூறப்பட்டாலும் இவற்றினிடைய பல்வேறு மாற்றங்கள் நிகழும், நமது விஞ்ஞானமும் உடலுறவின் போது (ஆண் ) கணவன்,மனைவின் உடல் நலம், மனநலம் பேணுதல், அவற்றினால் ஏற்படும் விளைவுகளைவும், மாற்றங்களையும் தெளிவாக விவரிக்கின்றது. கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் செயல்பாடுகள், உணவு முறைகளும் குழந்தை பிறப்பு மற்றும் அதன் உடல் நலனில் ஏற்படுத்தும் மாற்றங்களை தெளிவாக விளக்குகிறது. மனித உடலுள்ள இனப்பெருக்க அணுக்களில் உள்ள க்ரோமொசொம்கல்தான் பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணியிக்கின்றன.

அதாவது ஆணின் விந்தணுவில் உள்ள X குரோமோசோம், பெண்ணின் அண்ட அணுக்களில் உள்ள X குரோமோசோமுடன் X-X அல்லது Y-Y என்ற வகையில் X-X / Y-Y என்று இணைந்தால் பிறக்கப்போகும் குழந்தை ஆணாகவும், அதை விடுத்து 
X-Y என்று இணைந்தால் குழந்தை பெண்ணாகவும், (23X-23X) / (23Y-23Y)/(23X-23Y) என்று இணையாமல் தவறு ஏற்படுமாயின் பிறக்கும் குழந்தை திருநங்கையாகவோ, அங்ககீனத்துடனோ பிறக்கும் என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது.

* ஒரு உயிரின் ஜீன் குரோமோசோம் அணுக்களிலிருந்து அந்த உயிரின் அசலாக அதே தோற்றம், செயல்பாடு, குணாதிசயங்கள் கொண்ட மற்றொரு உயிரினத்தை குளோனிங் முறை மூலம் உருவாக்கப்படுகிறது !

* ஆண் இனத்தின் விந்தணுச் செல்களை, பெண் இனத்தின் அண்ட அணு கரு முட்டைகளை சோதனைச் சாலையில் செயற்கையாக கருவுறச்செய்து பெண் இன உயிரினத்தின் கர்ப்பப் பையினுள் வைத்து வளரச் செய்து டெஸ்ட் டியூப் முறை மூலம் செயற்கை இனப் பெருக்கத்தின் மூலம் உயிரினம் தோற்றுவிக்கப்படுகிறது.


* குளோனிங் முறை பல்வேறு நாடுகள், அறிஞர்களால் எதிர்க்கப்பட்டாலும், மறைமுகமாக நன்மை பயக்கும் வகையிலும், தீமை பயக்கும் வகையிலும் பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

* ஒரு உயிரினத்தை தோற்றுவிப்பதில் இவ்வளவு மருத்துவ விஞ்ஞான முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் மனித உயிரணுக் குரோமோசோம்களைக் கொண்டு ஆண் குழந்தை வேண்டுமென்றால் ஆண் குழந்தையையும், பெண் குழந்தை வேண்டுமென்றால் பெண் குழந்தையையும் பெறுவது என்பது சாத்தியமே!

* ஆண் மற்றும் பெண்ணினத்தின் இனப்பெருக்க உயிரணுக்களை இணைத்து செயற்கை முறையில் கருத்தரிக்க செய்யும்போது நமக்கு தேவையானபடி ஆணின் (Y)/X
 குரோமொசொம்களாக பிரிக்கப்பட்ட உயிரணுக்களை பெண்ணினத்தின் (Y)/X குரோமோசோம்களாக பகுக்கப்பட்ட உயிரணுக்களுடன் கருவுறச்செய்து ஆண் குழந்தையையும், அதேபோன்று (X-Y) என்ற முறையில் இணைத்து பெண் குழந்தையையும் பெறமுடியும் என்பது சாத்தியம்தான்!


அனால் நடைமுறையில் இன்றைய நிலையில்  மனிதன் இவற்றை தெரிந்துகொண்டுவிட்டால் பெண்குழந்தையே பெற்றுக்கொள்ளமாட்டான் என்பதாலேயே விஞ்ஞானம் ஆணா? பெண்ணா? என்பதை வெளியிட மறுக்கிறது. இதுவும் நம் நன்மைக்காகவே. விஞ்ஞான வளர்ச்சி என்பது மனித குலத்தின் நன்மைக்காகவே!
 

Saturday, April 14, 2012

கண்கள் கவனம்

நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வுகள் கூறும் சில பயனுள்ள தகவல்களை இங்கு பார்ப்போம்.

1. கம்ப்யூட்டர் இடம்: முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20டிகிரி கீழாக இருக்க வேண் டும். இதே போல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்கள், வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2. ஒளி அமைப்பு: அறையில் ஒளி அமைப்பு பல நம் கண்களுக்கு பலவகையில் சோதனை களைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப் படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும். நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி புரிவீர்கள் என்று கூறவும். இப்போது இந்த மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியினை வடி வமைப்பார்கள்.

3. 20:20:20 விதி: மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணி புரிந்து கொண்டிருந்தால், அதிக பட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட் களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்கு புத்துணர்வைத் தரும்.
பொதுவாக நிமிடத்திற்கு ஒருமுறை நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறை தான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை சிமிட்டவும்.
ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயாமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.

4.இதமான சூடு தேவை: கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண் களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

5. தண்ணீர் கொண்டு அடித்தல்: இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும். 

6. தேயிலை பைகள்: பயன்படுத்திய இரண்டு தேயிலை பைகள், அல்லது அந்த அளவில் மென்மையான மடிக்கப்பட்ட நனைக்கப் பட்ட துணியை, அலுவலகத் திற்குச் செல்கை யில் பிரிஜ்ஜில் வைத்து செல்லவும். பின்னர், அங்கிருந்து வந்த வுடன், அதனை எடுத்து, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்க வும். இது வேலை மிகுதியால், கண்களில் ஏற்படும் சிறிய வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.

7. வைட்டமின்கள்: ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடவும். 
நன்றி :தினமலர்  

Tuesday, April 10, 2012

உடல் உறுப்பு தானம் எப்படி செய்வது ?


``உடல் உறுப்பு தானம்'' " தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''


``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.
நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.

"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கம் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?''

"உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.


"உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?''


"ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.''


"இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''
                      
"இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).''

"யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?''


"நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.''


"உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?''

"18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.''


"உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?''


"ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன.'' 1954 ஆம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-

  1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.

    2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.


    3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.


    "தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?'

"பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தான் காரணம்.

ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் ``ப்ளாஸ்மா பெரிஸிஸ்'' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.''

"உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?''


"பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும்,


ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொம்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.

நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை.

ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.

ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது,

உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்கும் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.''

"வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?''


"கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.


ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.

ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.

எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம்.

ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.''

"ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?''


"ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன.


மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது.

பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன

நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.''

"உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?''

"உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள்.


கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது.

அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறைத்தும் போகக்கூடாது.

இதற்கென்று சில ரசாயன கலவைகம் உள்ளன. அவை ``வயாஸ்பான் திரவம்'', ``ïரோ கால்லின்ஸ்'' திரவம், ``கஸ்டோயியல்'' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன.

சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.''

"முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?''


"நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக ``அலெக்ஸில்'' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.''


1905 ஆம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.


1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.


1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் ``பாஸ்டன்'' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.


1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.


1960 ஆம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.

1963 ஆம் ஆண்டு ``கொலராடோ'' விலும்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.


1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் ``கேப்டவுன்'' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். ``டென்னிஸ் டார்வெல்'' என்பவரின் இதயத்தை ``லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி'' என்பவருக்கு பொருத்தினார்.


1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.


1983 ஆம் ஆண்டு ``சர். மாக்டியா கூப்'' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.


1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.


2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.


2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.

***
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?

சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - 5 மணி நேரம் வரை
இதயம்/ நுரையீரல் - 5 மணி நேரம் வரை
கணையம் - 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கம் வரை
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும்
பொதுவாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம்