Friday, September 28, 2012

தெற்கு ரயில்வேயில் வேலை


சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வே மற்றும் சென்னை இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் காலியாக உள்ள 2,461 காலிப்பணியிடங்களில், பல்வேறு பணிகளில் சேர விரும்பும் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வேயில் ஸ்வீப்பர்  கம் போர்ட்டர், டிராக்மேன், ஹெல்பர் கிரேடு 2 (எலெக்ட்ரிக்கல்), ஹெல்பர் கிரேடு 2 (மெக்கானிக்கல் ), ஹெல்பர் கிரேடு 2 (சிக்னல் அண்ட் தொலைத்தொடர்பு), ஹெல்பர் கிரேடு 2 (ஸ்டோர்ஸ்), உதவியாளர்கள் (அனைத்துப் பிரிவுகளுக்கும்), மருத்துவப் பிரிவிற்கு சஃபைவாலா போன்ற பிரிவுகளிலும், இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் டிராக்மேன், ஹெல்பர் கிரேடு , வெண்டர், பியூன், சானிட்டரி கிளீனர் போன்ற பிரிவுகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

இந்தப் பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தப் பணியில் சேர விரும்பும் நபர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐ.டி.ஐ. அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். அதிகப்படியான கல்வித் தகுதி உடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பணியாளர்கள் எப்படித் தேர்வு செய்யப் படுவார்கள்?

காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்கள் மட்டும் (அதாவது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் இருந்து மூன்று மடங்கு பேர்) உடற்தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மருத்துவத்  தகுதி சோதனைக்குப் பிறகு காலிப் பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

பெட் (பிசிக்கல் எலிஜிபிலிட்டி டெஸ்ட்) என்று அழைக்கப்படும் இந்த உடற் தகுதித் திறன் தேர்வு ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. ஆண் விண்ணப்பதாரர்களாக இருப்பின் 1,500 மீட்டர் தூரத்தை 6 நிமிடத்தில் ஓடிக் கடக்க வேண்டும். இதற்கு ஒரு வாய்ப்பு மட்டுமே தரப்படும். பெண் விண்ணப்பதாரர்களைப் பொருத்தவரையில் 400 மீட்டர் தூரத்தை 3 நிமிடங்களில் ஓடிக் கடக்க வேண்டும். இதற்கு ஒரு வாய்ப்பு மட்டுமே தரப்படும்.

எழுத்துத் தேர்வு எப்படி இருக்கும்?

எழுத்துத் தேர்வு மொத்தம் 2 மணி நேரம் நடைபெறும்.  கேள்விகள் முற்றிலும் அப்ஜெக்ட்டிவ் முறையில் அமைந்திருக்கும். கேள்விகள் பத்தாம் வகுப்புத் தரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். பொது அறிவு, கணிதம், அனாலிசிஸ், ஆங்கிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 150 கேள்விகள். கேள்வித்தாள் ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் இருக்கும். மாணவர்கள் தங்களுக்கான மொழியை தேர்வு செய்து விடையளிக்கலாம். தவறான கேள்விக்கு நெகட்டிவ் மதிப் பெண்கள் உண்டு. 3 தவறான கேள்விகளுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு வரை ரயில்வே துறை போட்டித் தேர்வு வினாத்தாள்கள்  முற்றிலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியிலேயே இருந்தன. இதனால், தமிழ்வழிக் கல்வியில் படித்து வந்த மாணவர்கள் இந்தக் கேள்விகளைப் புரிந்து விடையளிக்க சிரமப்பட்டே வந்தனர். ஆனால், தற்போது கேள்விகள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருவதால், தமிழ்வழிக் கல்வி படித்தவர்களுக்கு தேர்வு எளிமையாக இருக்கும்.

வயது வரம்பு:

பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 33 வரையிலும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 18 - 36 வரையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 18 முதல் 38 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் கேஷுவல் மற்றும் சப்ஸ்டிட்யூட் தொழிலாளர்கள் உட்பட குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்  பணியாற்றிவரும் தொழிலாளர்கள் பொதுப்பிரிவினராக இருக்கும்பட்சத்தில் 40 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட பிரிவினராக இருக்கும்பட்சத்தில் 43 வயது வரையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகள் 43 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 46 வயது வரையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 48 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம்:

ரூ.40 தேர்வுக்கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. The Assistant  personal officer/ Recruitment, RRC, Chennai – 600008  என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் தேசிய மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியின் கோடிட்ட வரைவோலை அல்லது அஞ்சலகத்திலிருந்து பெறப்பட்ட கோடிட்ட இந்திய அஞ்சல் ஆணை வடிவில் செலுத்த வேண்டும். இந்திய  அஞ்சல் ஆணை அல்லது வங்கி வரைவோலை கண்டிப்பாக தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான போது அல்லது அதற்குப் பிறகு பெறப்பட்டதாக இருக்க வேண்டும். தேர்வு அறிவிப்புக்கு முன்பாக வரைவோலை எடுத்திருப்பின் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும். வங்கி வரைவோலை அல்லது இந்திய அஞ்சல் ஆணையில் பெயருக்கான இடத்தில் மற்றும் காசோலையின் பின்புறம் வேலைவாய்ப்பு அறிவிப்பு எண் மற்றும் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் அஞ்சல் முகவரியை குறிப்பிட வேண்டும்.

மணி ஆர்டர், காசோலை, அஞ்சலகம் வழங்கும் சென்ட்ரல் ரெக்ரூட்மெண்ட் கட்டண ஸ்டாம்பு அல்லது மற்ற எவ்விதமான முறையில் கட்டணம் செலுத்தினாலும் அது நிராகரிக்கப்படும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது எப்படி?

ஒரு விண்ணப்பதாரர்  ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர் பல விண்ணப்பங்களை அனுப்பினால் அது ஏற்கப்படாது. ஒருவேளை பல விண்ணப்பங்கள் அனுப்பி, ஒரு விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், இந்த ஒரு காரணத்திற்காக பணி நியமனம் செய்யப்படாமல் போகலாம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். விண்ணப்பதாரர் தங்கள் விண்ணப்பப் படிவத்தை நீலநிற அல்லது கறுப்பு நிற பால் பாயிண்ட் பேனாவால் மட்டுமே நிரப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் பெயர், பின்கோடுடன் கூடிய முகவரி, பிறந்த நாள், தந்தையின் பெயர் மற்றும் அருகாமையிலுள்ள ரயில் நிலையம் முதலியவற்றை கேப்பிட்டல் எழுத்துக்களில் எழுத வேண்டும்.

விண்ணப்பதாரர் தங்கள் உடலிலுள்ள ஏதாவது கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும் அடையாளம் பற்றி குறிப்பிட்டிருக்க வேண்டும். அடையாளம் பற்றிக் குறிப்பிடும் பத்தியை தெளிவாகப் பூர்த்தி செய்யாமல் விடும் விண்ணப்பதாரரின் விண்ணப்பப் படிவம் நிராகரிக்கப்படும். தெளிவில்லாத, சரியாகப் பூர்த்தி செய்யாத, கையொப்பம் போடப்படாத, தகுந்த வடிவத்தில் இல்லாத, புகைப்படம் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவை:

விண்ணப்பத்துடன் பிறந்த தேதி சான்றின் நகல், கல்வித் தகுதிக்கான நகல், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிள் சாதிச் சான்றிதழின் நகல், முன்னாள் ராணுவத்தினராக இருந்தால் பணிவிடுப்புச் சான்றிதழின் நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை தெற்கு ரயில்வே இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்துகொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியைப் பெற்று அரசு வேலையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மாணவர்கள், அரசு வேலைவாய்ப்பிற்காக ஆண்டுக்கணக்காக போட்டித் தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்கள், மத்திய அரசுத் துறைகளின் ஒரு முக்கிய அங்கமான ரயில்வே துறையில் பணியில் சேர விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 25-09-2012
விவரங்களுக்கு : www.rrcchenai.org.in

Wednesday, June 6, 2012

மனித உடல் பற்றி


  • ஆண்களின் கண் இமை துடிப்பினை விடவும் இரட்டிமடங்கு வேகத்தில் (தடவை) பெண்களின் கண் இமை துடிக்கின்றது.
  • பெண்களின் தலைமுடி ஆண்களின் முடியை விடவும் மெல்லியனவாம்.
  • அறிவாற்றல் கூடியவர் தலைமுடியில் அதிக செம்பு, நாகம் உலோகங்கள் அதிகமாக இருப்பது அறியப்பட்டுள்ளது.
  • சாதாரண மனிதனின் உயரம் காலையில் இருந்ததை விடவும் மாலையில் 1 cmகுறைவாக இருக்குமாம்.(இது மூட்டு பகுதிகளில் காணப்படும் இடைவெளி அமுக்கம் காரணமாக இல்லாது போவது இதற்கு காரணமா சொல்லப்படுகின்றது.)
  • மனிதனின் கண் இமையில் அண்ணளவாக 550 முடிகள் (மயிர்கள்) உள்ளன.
  • மனித உடம்பில் நாக்கிலுள்ள தசைகள் தான் தசைகளில் மிகவும் பலம் வாய்ந்தவை.
  • எமது நாக்கில் உள்ள சுவை உணரிகள் 10 நாட்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கிறன.
  • வீடுகளில் காணப்படும் தூசியின் பெரும் பகுதி மனித உடலில் இருந்து புறப்பட்ட இறந்த தோல்களாகும்.
  • எமது உடம்பில் ஒரு செக்கன் காலத்தில் 15 மில்லியன் இரத்த சிவப்பு கலங்கள் அழிக்கப்பட்டும் உருவாக்கப்பட்டும் வருகின்றது.
  • ஒரு சாதாரண மனிதனின் உடலில் வாழ் நாளில் 10,000 கலன் உமிள்நீர் உற்பத்தியாகின்றது.
  • அதிக கரற் (Carrots) உண்டதன் பின்னர் மனித தோலின் நிறம் வெழுப்பாக (கரற் நிறத்தினை ஒத்ததாக) மாறுகின்றதாம்.
  • சராசரி மனிதர் ஒரு வருடத்தில் 10 மில்லியன் தடவை சுவாசிக்கின்றனர்.
  • மனித கையின் நடுவிரலின் நகங்கள் மிக வேகமாக வழர்கின்றன. சுட்டு விரல் தான் விரல்களிலேயெ உணர்சிகளை அதிகம் உணரவல்லது.
  • மனித உடலின் மொத்த எடை மனித மூலையை விட 40 மடங்கு பெரியது.
  • மனித எலும்புகளில் மிகவும் பலம் மிக்கது தாடை (முகப்பகுதி) எலும்புகளாகும்.
  • உடல் உறுப்புகளிலேயே கண் மட்டும் தான் பிறந்தவுடன் உள்ள அதே அளவில் எப்போதும் உள்ளது , மற்றய எல்லா உறுப்புகளும் வளர்ச்சியுடன் தொடர்ந்து மாறுபடுகின்றன.

Wednesday, May 30, 2012

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் !


பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தன. இவர்கள் உடல் சிறப்பாக இயங்கியது. பழைய விஷயங்களைக்கூட இவர்கள் சரியாக ஞாபகப்படுத்தி சொன்னார்கள்.
ஆனால் பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் அநியாயத்திற்கு மறதிக்கு பெயர் போனவர்களாக இருந்தார்கள். பல விஷயங்கள் இவர்களது ஞாபகத்திற்கு வரவில்லை. வீட்டைச் சரியாகப் பூட்டினோமோ? என்று பஸ்ஸில் ஏறிய பிறகு சந்தேகத்துடன் பயணிப்பார்கள். மனக்குழப்பம் தெளிவின்மையும் இவர்களிடம் அதிகம்.
பிரிட்டீஷ் விஞ்ஞானிகளால் பி வைட்டமின்களுக்கும் ஞாபக சக்திக்கும் என்ன தொடர்பு என்று கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் ‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு தடையின்றி நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் படு சுறுசுறுப்பாக இயங்கும்.
கோழி சூப்பால் நன்மை உண்டா ?
ஜலதோஷ நேரத்தில் கோழி சூப் ஆட்டுக்கால் சூப் அல்லது சிறிய துண்டு கோழி இறைச்சி சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இது உண்மையா? அறிவியல் ரீதியாக உண்மை. இவைகளில் உள்ள துத்தநாக உப்பு நன்மை செய்கிறது.
கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்யலாமா?
உடற்பயிற்சி செய்யும் கர்ப்பிணி பெண்கள் உடற்பயிற்சி செய்யாத கர்ப்பிணிகளை விட நல்ல வெயிட்டான குழந்தைகளைப் பெறுகின்றனர். உடற்பயிற்சியினால் வாரத்திற்கு 2000 கலோரி எரிக்கப்படுகிறது. இந்தப் பெண்கள் பிரசவ தேதி குறிப்பிட்ட தினத்தன்றே சிரமம் இன்றி எளிதாகக் குழந்தையை பிரசவித்தும் விடுகின்றனர். குழந்தையும் படு ஆரோக்கியமாக உள்ளது. மிக்ஸிகன் ஸ்டேட் பல்கலைக்கழகம் இது பற்றிய ஆய்வில் தீவிரமாக இப்போது இறங்கியுள்ளது. புது மணப்பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது.
நீரிழிவு நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா?
சாப்பிடலாம். ஆனால் அரிசி உருளைக்கிழங்கு ரொட்டி போன்றவை என்றால் குறைவாகத்தான் சாப்பிட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் பழங்கள் சாப்பிடும் போது தயிர் ஐஸ்கிரீம் இனிப்பு சர்பத் முதலியன சேர்த்து சாப்பிடக்கூடாது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இதனால் முழுமையான மாவுச்சத்து உணவுப் பட்டியலில் பழங்களைச் சேர்க்கவில்லை.
வண்ணங்களின் நிற வேறுபாடு தெரியாதவர்கள் இரவில் சரியாக நிறங்களைக் கண்டு உணருகிறார்கள். யுனிவர்சிட்டி ஆப் குரோனின்ஜென் இதைக் கண்டறிந்துள்ளது. இந்த டச்சு பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியல் துறை நிற வேறுபாடுகளைத் தெரிந்து கொள்ளமுடியாத 326 மாணவர்களை இருட்டில் பரிசோதித்து இந்த மாணவர்கள் இருட்டான சூழ்நிலையில் பச்சைஇ சிவப்புஇ நீலம் போன்ற நிறமுள்ள பொருட்களை சரியாகச் சுட்டிக் காட்டினார்கள். ஆரம்ப காலத்திலும் இதே போல நிறக்குருடு மக்கள் இருட்டில் தான் சரியான உணவு எது என்பதைத் தேடி எடுத்து (தட்டிலிருந்து) சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீனைத் தவிர்ப்பது நல்லதா?
1. இரத்தக் கொதிப்பைக் குறைக்கிறது. 2. கொழுப்புப் பொருட்கள் இரத்தக் குழாய்களில் தங்கி இருந்தால் ஆக்ஸிஜன் செல்லத்தடை. எனவே குருதிக் குழாய்களில் உள்ள இது போன்ற டெபாஸிட்டுகளை நீக்கி ரிப்பேர் செய்கிறது. 3. இரத்தம் உறைவதை தடுக்கிறது. 4. கல்லீரல் அதிகம் கொழுப்பு உற்பத்தி செய்வதையும் கட்டுப்படுத்துகிறது. 5. கெடுதல் செய்யும் கொலாஸ்டிரலை குறைத்துவிடுகிறது. எனவே அசைவ உணவுக்காரர்கள் மற்ற அசைவ உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு மீனைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

Monday, May 28, 2012

வாழை பழத்தோல்------குடி தண்ணீரை சுத்தமாக்க உதவும்

குடிநீரை சுத்தப்படுத்த இனி பியூரிபையர் தேவையில்லை. வாழைப்பழ தோல் போதும். குடிநீரில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஒப் பயோசின்சியாஸ் நிறுவனத்தின் குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழுவினர் குடிநீரை சுத்தப்படுத்துவது குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதன் விவரம்: இன்று குடிநீராக பயன்படும் தண்ணீர், காரீயம், செம்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் இரசாயன பொருட்களால் மாசடைந்து காணப்படுகின்றது. இத்தகைய நச்சுப் பொருட்கள் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை நீக்குவதற்கு பியூரிபையர் உட்பட பல்வேறு இரசாயன முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றுக்கு செலவு அதிகமாவதுடன், நச்சுத் தன்மை உள்ளதாகவும் இருக்கின்றன.

இந்நிலையில், தேங்காய் நார் மற்றும் கடலை தோல் உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சில்வர் பாத்திரங்கள் மற்றும் தோல் சப்பாத்துக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழ தோலைக் கொண்டும் தண்ணீர் சுத்தப்படுத்தலாம் என்று இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதாவது, தண்ணீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால் போதும், அதில் உள்ள உலோக நச்சுப் பொருட்களை உடனடியாக தன்னகத்தே உறிஞ்சிக்கொள்ளும். எவ்வித இரசாயனப் பொருட்களையும் சேர்க்கத் தேவையில்லை. தண்ணீரை சுத்தப்படுத்துவதில் மற்ற முறைகளைவிட இம்முறை சிறப்பானதாகவும் செலவு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழ தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Sunday, May 27, 2012

இரத்த கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?


இரத்த கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?
    இரத்தக் கொதிப்பு (Hypertension) அல்லது உயர் இரத்த அழுத்தம் என்பது நம் உடலில் உள்ள சிறிய இரத்தக் குழாய்களின் உள் சுவர்கள் இரத்த ஓட்டத்திற்கு எதிராக ஏற்படுத்தும் அதிக அளவு தடையைக் குறிக்கும்.
இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது?
    நாம் நடுத்தர வயதைக் (35 To 40) கடக்கும் போது நம் உடலில் உள்ள சிறிய சுத்த இரத்தக குழாய்கள் (Arterides) விரியும் தன்மையை இழக்கின்றன. மேலும் நமது தவறான உணவுப் பழக்கங்களினால் இரத்தக் குழாய்களின் உட்புறம் படியும் தீங்கு செய்யும் கொழுப்பு வகைகளினால் தடிப்பு ஏற்பட்டு உள் அளவு சுருங்குகிறது. இதனால் இரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைந்து அழுத்தம் அதிகமாகிறது. இந்த நிலையைத் தான் நாம் "இரத்தக் கொதிப்பு" என்று கூறுகிறோம்.
இரத்தக் கொதிப்பு ஒரு வியாதியா?
    இரத்தக் கொதிப்பு என்பது நோயல்ல. ஆனால் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டுபிடித்துத்  தடுக்கவில்லையென்றால் மெதுவாக நமது உடலின் பல்வேறு முக்கிய உறுப்பு மண்டலங்களை பாதித்து, அவற்றில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இரத்தக் கொதிப்பு அமைந்துவிடும்.
இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் காரணங்கள் யாவை?
  1. நாம் உண்ணும் உணவின் தன்மை.
  2. மன அழுத்தம்.
  3. எளிதில் உணர்ச்சி வசப்படுதல்.
  4. புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம்
  5. உடல் எடை அதிகரித்தல்
  6. ஹார்மோன் சுரப்பியில் நிகழும் கோளாறுகள்.
  7. சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள்.
  8. உடற்பயிற்சி இல்லாமல் சோம்பி இருப்பது.
  9. சத்தம் அதிகம் உள்ள இடங்களில் வெகுநாட்கள் குடியிருத்தல்.
  10. பரம்பரைத் தன்மை. (Genetic Predirposition)
இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் யாவை?
    இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் நாம் இன்னும் முழுவதும் அறியவில்லை என்றாலும், சில முக்கிய மோசமான விளைவுகள் இரத்தக் கொதிப்பினால் ஏற்படுகின்றன.
பக்கவாதம் (Stroke)
    இரத்தக் கொதிப்பு அதிகமாகும் போது மூளைக்குச் செல்லும் மெலிதான இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தை தாங்கமுடியாமல் உடைப்பு ஏற்பட்டு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இந்த இரத்தக் கசிவினால் மூளையிலிருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கும் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு கை, கால்களை முடங்கிப் போகும் பொழுது வாதம் (Stroke or paralysis) ஏற்படுகிறது.
பார்வை பறிபோகுதல்(Blindrers)
    விழிக்கோளத்தின் பின்புறம் உள்ள இரத்தக் குழாய்களில், வெடிப்பினால் உண்டாகும் இரத்தக் கசிவு, கண்பார்வை குறைவு மற்றும் குருட்டுத்தன்மை விளைவுகளை உண்டாக்கும்.
சிறுநீரக செயலிழப்பு (Renel Failure)
    இரத்தக் கொதிப்பு இருப்பதே தொ¢யாமல் விட்டுவிட்டால், அது மெல்ல மெல்ல சிறுநீரகத்தைப் பாதித்துவிடும். சிறுநீரகம் வேலை செய்யும் திறன் சிறிது சிறிதாகக் குறைந்து, இறுதியில் சிறுநீரகம் செயலிழந்துவிடும் நிலை (Renel Failure) உண்டாகும், இரத்தக் கொதிப்பினால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று பார்த்தோம். அது போலவே, வேறு காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படும் போது, அது இரத்தக்கொதிப்பை உண்டுபண்ணும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் இரத்தக் கொதிப்பு ஒருவருக்கு நீண்ட காலம் இருக்குமேயானால் அவர் நமது சிறுநீரகங்களின் செயல்திறனையும் பரிசோதித்துக் கொள்ளுதல் அவசியம்.
இதயநோய் மற்றும் மாரடைப்பு (Heart Attack)
    இதயம் தான் இரத்தக் கொதிப்பின் அடுத்த குறி. ஹார்ட் அட்டாக் ஏற்படுத்த இது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இரத்தக் கொதிப்பை வெகுநாட்களாகக் கண்டு கொள்ளாமல் விடுவதால், அந்த அதிக இரத்த அழுத்தத்துக்கு எதிராக பம்பு செய்யும் இதயம் விரிவடைந்து, அதன் செயல்திறன் குறையலாம். இறுதியாக, ஹார்ட் ·பெயிலியர் என்ற நிலையும் வரலாம்.
நமது இரத்த அழுத்தத்தை எப்படி அளப்பது?
    இரத்த அழுத்தத்தின் அளவு பாதரசத்தின் மில்லி மீட்டர் அளவுகளில் அறியப்படுகிறது. இரத்த அழுத்தம் அளக்கப்படும் போது இரண்டு குறியீடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அவை
(1) சிஸ்டாலிக் அழுத்தம்
(2) டயஸ்டாலிக் அழுத்தம்
    முதலில் குறிப்பிட்டிருக்கும் சிஸ்டாலிக் அழுத்தம் இதயம் சுருங்கும் போது இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தை குறிக்கிறது.
    இரண்டாவது அளவான டயஸ்டாலிக் அழுத்தம், இதயம் ரிலாக்ஸாகி பழைய நிலைமைக்கு வரும்போது இரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தத்தைக் குறிக்கிறது.
    ஒரு ஆரோக்கியமான மனிதனின் இரத்த அழுத்தம் 120/80 மி.மீ மெர்க்குறி என்பதாகும். நடுத்தர வயதில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களுக்கு இந்த அளவானது சிறிது மாறுபடும். 139/89 மி.மீ மெர்க்குறி என்னும் அளவு வரை நார்மல் என்றே கூறலாம்.
    140/90 முதல் 160/110 மி.மீ மெர்க்குறி வரை உள்ள அளவுகள் ஓரளவு உயர்ந்த இரத்த அழுத்தத்தைக் குறிக்கும் (Mild To Moderate Hypertension)
    இதற்கு மேல் உள்ள அளவுகள் மிக அதிகமான உயர் இரத்த அழுத்தத்தினைக் குறிக்கும்.
நார்மல்
சிஸ்டாலிக் இரத்த அழுத்தம்
 (மி.மீ மெர்குறி) 130க்கு கீழ்
டயஸ்டாலிக் இரத்த அழுத்தம்
 (மி.மீ மெர்குறி) 85க்கு கீழ்
அதிகபட்ச நார்மல்
130 - 139
85 - 89
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் -1
140 - 159
90 - 99
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் - 2
160 - 179
100 - 109
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் - 3
180 - க்கு மேல்
110 - க்கு மேல்
இரத்தக் கொதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்னென்ன?
    மருந்து உட்கொள்வது மட்டுமின்றி நமது வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்து கொள்வதினாலும் நாம் இரத்தக் கொதிப்பிலிருந்து விடுபடலாம்.
1) உணவில் உப்பு சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளல்:    உப்பு அதிகமாக இருக்கும் பண்டங்களான ஊறுகாய், அப்பளம், கருவாடு, மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் முந்தரி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
2) பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில்     அதிக அளவில் சேர்த்துக் கொள்வது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.
3) மனதை ரிலாக்ஸ் செய்யும் முறைகள்:    யோகா மற்றும் தியானம்(Meditation) ஆகியவற்றை எந்த பரபரப்பும் இன்றி தவறாமல் செய்தால் இரத்தக் கொதிப்பு பெருமளவு குறையும்.
4) உடற்பயிற்சி:    தினமும் தவறாமல் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போவதோ, 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதோ அல்லது நீச்சல் அடிப்பதோ சரியான உடற்பயிற்சி முறைகள். இவை உடற்பருமனையும் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.
5) புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை அறவே நீக்குவதால்    இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
6) தவறாமல் குடும்ப டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுதல்:    நம் நாட்டில் சமீபகாலமாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்குக் கூட இரத்தக் கொதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே 20 லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் வருடத்துக்குக் இரண்டு முறையாவது பா¢சோதனை செய்து கொள்வது அவசியம்.
    40 வயதைக் கடந்தவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, குடும்பரிதியாக உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தங்களை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம்.
    உயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபகாலமாக நம் நாட்டு மக்களில் அநேகம் பேரை பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு எந்த விளைவுகளும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியும் காட்டாமல், ஆபத்தான கட்டத்தை நோக்கி உள்ளே அது பூதாகாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான மனிதராகவே நாம் நடமாடிக் கொண்டிருக்க ஒரு நிலையில் திடீரென்று இரத்தக் கொதிப்பு தன் கோர முகத்தைக் காட்டும் போது, நாம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். இதன் வெளிப்படையான அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக் கொலையாளி (Silent Killer) என்று அழைத்தால் அது மிகையாகாது.
நன்றி :dr.mulrali. MDS


Wednesday, May 2, 2012

தூக்கத்தை தரும் உணவுப்பொருட்கள்


சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.
உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
இந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.
தேநீர்: உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.
அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.
வாழைப்பழம்: மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.
இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.
பால்: பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.
ஓட்ஸ்: நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.
இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.
செர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.

Sunday, April 22, 2012

ரேஷன் கடைகளில் முறைகேடா?பறக்கும் படைக்கு “டயல்’ பண்ணுங்க


தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இவை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கவும், உணவுப் பொருட்கள் பதுக்கலைக் கண்காணிக்கவும் பறக்கும் படை அமைக்கப்பட்டும், முறைகேடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதி ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெற்றால் பறக்கும் படையினருக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கலாம்.
பறக்கும் படை கண்காணிப்பாளர்கள் கைபேசி எண்கள் வருமாறு:
சென்னை கண்காணிப்பாளர் – 9445045601,
சென்னை (வ) கண்காணிப்பாளர்- 9445045602
சென்னை (தெ) கண்காணிப்பாளர் – 9445045603

மாவட்டம் வாரியாக பறக்கும் படை தாசில்தார்களின் கைபேசி எண்கள் வருமாறு:
காஞ்சிபுரம் – 9445045604
திருவள்ளூர் – 9445045605 திருச்சி – 9445045618
வேலூர் – 9445045606 தஞ்சாவூர் – 9445045619
தி.மலை – 9445045607 திருவாரூர் – 9445045620
விழுப்புரம் – 9445045608 நாகை – 9445045621
கடலூர் – 9445045609 புதுகை – 9445045622
தர்மபுரி – 9445045610 திண்டுக்கல் – 9445045623
சேலம் – 9445045611 தேனி – 9445045624
நாமக்கல் – 9445045612 மதுரை -9445045625
ஈரோடு – 9445045613 சிவகங்ககை – 9445045626
கோவை – 9445045614 விருதுநகர் -9445045627
நீலகிரி – 9445045615 ராமநாதபுரம் – 9445045628
கரூர் – 9445045616 தூத்துக்குடி – 9445045629
பெரம்பலூர்- -9445045617 நெல்லை – 9445045630
கன்னியாகுமரி -9445045631 கிருஷ்ணகிரி -9445045632
நன்றி-தினமலர்

Monday, April 16, 2012

பிறக்கப்போகும் குழந்தை ஆணா? இல்லை பெண்ணா?

 பல காலங்களாக மனிதன் பிறப்பு மற்றும் இறப்பையே விதியின் முதன்மை நிகழ்வாக அதாவது மாற்றமுடியாத ஒன்றாக கருதுகின்றான். ஆனால் மெய்ஞானம், விஞ்ஞானம் இரண்டும் பிறப்பு மற்றும் இறப்பை (காலத்தை அல்லது தன்மையை) மாற்றி அமைக்க முடியும் என்று கூறுகின்றன.

பிறப்பு:

* குழந்தை உருவாவது, அது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா, குழந்தை பிறப்பது என்பனவற்றையெல்லாம் நம்மால் நிர்ணியிக்க முடியாது, "எல்லாம் கடவுளின் செயல், எதுவும் விதிப்படிதான் நடக்கும்"
என்று கூறுவது அறியாமையின் செயல்.

மெய்ஞானத்தில்:

அகத்தியர், திருமூலர், சரகர் போன்றோரின் வைத்திய மற்றும் கலை நூல்களிலிருந்து பிறப்பானது நிர்ணியிக்ககூடிய ஒன்றாக, மாற்றக்கூடியதாகவும் நிரூபிக்கப்படுகிறது. மனிதனின் உடலில் ஓடுகின்ற நாடிகளான வாதம், பித்தம், கபம் {சிலோத்துமம்} என்ற மூன்று முக்கிய நாடிகளிலிருந்து மனிதனின் உடலில் ஏற்படும் நோய் முதலான அனைத்து மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடியும். அதில் மகப்பேறுவும் உண்டு.

பெண்ணின் (கர்பமடைந்துள்ள) நாடித்துடிப்பின் மாற்றங்களிலிருந்து அப்பெண் பிள்ளை பெறும் நேரத்தையும், பிள்ளையும், பெண்ணின் உடலின் நிறம் முகமாற்றங்களையும் வைத்து பெண் பெறப்போகும் குழந்தையானது ஆணா? பெண்ணா? குழந்தையின் உடல் நிறம், குணம், உடல்நிலை போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

மேலும் கர்பமாக உள்ள ஒரு பெண்ணானவள் உட்கொள்ளும் உணவின் அளவு, விரும்பும் உணவு வகைகள், சுவாசிக்கும் அளவு மற்றும் முறை.... இன்னும் பலவகையான வழிகளில் அவள் பெறப்போகும் குழந்தையினை வரையறுக்கலாம். இவைகள் அனைத்தும் விஞ்ஞானத்தாலும் நிரூபிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

* அதே போன்று அறியாமனிதர்கள், பணத்தின் காரணமாகவும், பக்தியின் காரணமாகவும், வீணடிக்கும் நேரங்கள் பல ... பிறகு எங்கே இவற்றை அறிந்துகொள்வது?

பல காலங்களாக பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது கடவுளைத்தவிர வேறு எவராலும் நிர்ணியிக்க முடியாத, மாற்ற முடியாத வித்தின்பார் பட்டது என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு ஓன்றிரண்டு பேர் மாற்ற முற்பட்டாலும் இயற்கைக்கு மாறாக, இயற்கைக்கு நியதிகளுக்கு மாறான, எதிரான கண்டுபிடிப்பு இது மனித குலத்திற்கும், பூமிக்கும் அழிவை உண்டாக்கும் என்று குற்றம் சாற்றுகின்றனர்.அப்படிப்பார்த்தால் தற்பொழுது மனிதன் பயன்படுத்திவரும், கண்டுபிடித்துள்ள அனைத்து அறிய கண்டுபிடிப்புகளும் ஏதாவதொரு வகையில் புவியின் நலனுக்கு கேடு விளைவிக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. எப்பொழுதும் ஒரு பொருள் அழியும் போதுதான் மற்றொன்று கண்டறியப்படுகின்றது (ஒன்றின் வழியே மற்றொன்று ) ஒன்று அழியாமல் அதே நிலையில் இருக்க வேண்டுமெனில் மாற்றங்களும், முன்னேற்றங்களும் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும். என்ன சொல்லவருகிறேனென்று புரியவில்லையா!.....

பிறக்கப்போகும் குழந்தை ஆணா? இல்லை பெண்ணா? என்று நம்மால் நிர்ணயிக்க முடியும் என்பதைத்தான் கூறுகின்றேன்.


மெய்ஞானத்தின் வாயிலாக....

பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்றும் வயதையும், குணப்பண்புகளையும் எவ்வாறு நிர்ணயிப்பது என்று திருமூலர் வைத்தியசாரம் தெளிவாக உணர்த்துகிறது. நம் வாழ்விற்கும், ஆயுட்காலத்திற்கும், உயிரோட்ட செயல்பாடுகளுக்கும், உடல் வளர்ச்சிக்கும், இப்புவியில் உயிரினம் தோன்ற மூலகாரணமாயிருந்த காற்றும், அதனை நாம் சுவாசிக்கும் முறைகளும், மேற்கூறியவற்றை நிர்ணயிக்கின்றன.

இதனடிப்படையில் .....

*ஆண் /பெண் பிறப்பு (ஆண்களுக்கானது ):
மணமான ஆணும், பெண்ணும் கூடும்பொழுது கணவருடைய சுவாசம் மூக்கின் வலப்பக்கமாக (பிங்கலை ) நடந்தால் ஆண் குழந்தையையும், இடப்பக்கமாக நடந்தால் (இடகலை ) பெண்குழந்தையையும், இரண்டு பக்க மூக்கின் வழியாகவும் நடந்தால் குழந்தையானது அலி (திருநங்கை) தன்மையுடையதாகவும் தம்பதியர் பெறுவர். அதாவது நாம் சுவாசிக்கும் காற்றானது வாரத்தின் 3 நாட்கள் இடது மூக்கின் வழியாகவும், 3 நாட்கள் வலது மூக்கின் வழியாகவும், ஒரு நாள் இரண்டு மூக்கின் வழியாகவும் சுவாசம் நடைபெறும். இதை அறிந்து
கொள்வதில்தான் சூட்சமம் இருக்கின்றது.


விஞ்ஞானத்தின் வாயிலாக ...

தற்பொழுது மனிதன் விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக உள்நோக்கி -பொருட்கள் -கட்டமைப்பு -அணுக்கள் மூலக்கூறுகள் வரிசையிலும், வெளிப்புறம் நோக்கி - கோள்கள் -சூரியகுடும்பம் -அண்டம் -பேரண்டம் பிரபஞ்சம் என்ற வரிசையிலும் வெளிக்கொணர்ந்த ஆய்வுகள் எண்ணற்றவை, அதில் ஒரு சிறு புள்ளிதான் உயிரின் படைப்பு பற்றிய ஆய்வு. அந்த ஆய்வுதான் நம்மை டெஸ்ட்டியூப் பேபி, குளோனிங், DNA Map Analysis, போன்றவற்றை அறிய செய்துள்ளன.

நவீன அறிவியல் விஞ்ஞானத்தின்படி ஒரு ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது அந்த ஆணினால் அளிக்கப்படும் விந்தணுக்கள் சரியான முதிர்ந்த நிலையிலுள்ள பெண்ணின் கருமுட்டையை அடைந்து ஒரே ஒரு ஆற்றல் வாய்ந்த விந்தணு மட்டும் கருமுட்டையை துளைத்து சென்று கருத்தரிக்கின்றது. மற்றவை அளிந்துவிடுகின்றன. இது விரையாக சுருக்கமாக கூறப்பட்டாலும் இவற்றினிடைய பல்வேறு மாற்றங்கள் நிகழும், நமது விஞ்ஞானமும் உடலுறவின் போது (ஆண் ) கணவன்,மனைவின் உடல் நலம், மனநலம் பேணுதல், அவற்றினால் ஏற்படும் விளைவுகளைவும், மாற்றங்களையும் தெளிவாக விவரிக்கின்றது. கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் செயல்பாடுகள், உணவு முறைகளும் குழந்தை பிறப்பு மற்றும் அதன் உடல் நலனில் ஏற்படுத்தும் மாற்றங்களை தெளிவாக விளக்குகிறது. மனித உடலுள்ள இனப்பெருக்க அணுக்களில் உள்ள க்ரோமொசொம்கல்தான் பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணியிக்கின்றன.

அதாவது ஆணின் விந்தணுவில் உள்ள X குரோமோசோம், பெண்ணின் அண்ட அணுக்களில் உள்ள X குரோமோசோமுடன் X-X அல்லது Y-Y என்ற வகையில் X-X / Y-Y என்று இணைந்தால் பிறக்கப்போகும் குழந்தை ஆணாகவும், அதை விடுத்து 
X-Y என்று இணைந்தால் குழந்தை பெண்ணாகவும், (23X-23X) / (23Y-23Y)/(23X-23Y) என்று இணையாமல் தவறு ஏற்படுமாயின் பிறக்கும் குழந்தை திருநங்கையாகவோ, அங்ககீனத்துடனோ பிறக்கும் என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது.

* ஒரு உயிரின் ஜீன் குரோமோசோம் அணுக்களிலிருந்து அந்த உயிரின் அசலாக அதே தோற்றம், செயல்பாடு, குணாதிசயங்கள் கொண்ட மற்றொரு உயிரினத்தை குளோனிங் முறை மூலம் உருவாக்கப்படுகிறது !

* ஆண் இனத்தின் விந்தணுச் செல்களை, பெண் இனத்தின் அண்ட அணு கரு முட்டைகளை சோதனைச் சாலையில் செயற்கையாக கருவுறச்செய்து பெண் இன உயிரினத்தின் கர்ப்பப் பையினுள் வைத்து வளரச் செய்து டெஸ்ட் டியூப் முறை மூலம் செயற்கை இனப் பெருக்கத்தின் மூலம் உயிரினம் தோற்றுவிக்கப்படுகிறது.


* குளோனிங் முறை பல்வேறு நாடுகள், அறிஞர்களால் எதிர்க்கப்பட்டாலும், மறைமுகமாக நன்மை பயக்கும் வகையிலும், தீமை பயக்கும் வகையிலும் பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

* ஒரு உயிரினத்தை தோற்றுவிப்பதில் இவ்வளவு மருத்துவ விஞ்ஞான முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் மனித உயிரணுக் குரோமோசோம்களைக் கொண்டு ஆண் குழந்தை வேண்டுமென்றால் ஆண் குழந்தையையும், பெண் குழந்தை வேண்டுமென்றால் பெண் குழந்தையையும் பெறுவது என்பது சாத்தியமே!

* ஆண் மற்றும் பெண்ணினத்தின் இனப்பெருக்க உயிரணுக்களை இணைத்து செயற்கை முறையில் கருத்தரிக்க செய்யும்போது நமக்கு தேவையானபடி ஆணின் (Y)/X
 குரோமொசொம்களாக பிரிக்கப்பட்ட உயிரணுக்களை பெண்ணினத்தின் (Y)/X குரோமோசோம்களாக பகுக்கப்பட்ட உயிரணுக்களுடன் கருவுறச்செய்து ஆண் குழந்தையையும், அதேபோன்று (X-Y) என்ற முறையில் இணைத்து பெண் குழந்தையையும் பெறமுடியும் என்பது சாத்தியம்தான்!


அனால் நடைமுறையில் இன்றைய நிலையில்  மனிதன் இவற்றை தெரிந்துகொண்டுவிட்டால் பெண்குழந்தையே பெற்றுக்கொள்ளமாட்டான் என்பதாலேயே விஞ்ஞானம் ஆணா? பெண்ணா? என்பதை வெளியிட மறுக்கிறது. இதுவும் நம் நன்மைக்காகவே. விஞ்ஞான வளர்ச்சி என்பது மனித குலத்தின் நன்மைக்காகவே!
 

Saturday, April 14, 2012

கண்கள் கவனம்

நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வுகள் கூறும் சில பயனுள்ள தகவல்களை இங்கு பார்ப்போம்.

1. கம்ப்யூட்டர் இடம்: முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20டிகிரி கீழாக இருக்க வேண் டும். இதே போல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்கள், வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2. ஒளி அமைப்பு: அறையில் ஒளி அமைப்பு பல நம் கண்களுக்கு பலவகையில் சோதனை களைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப் படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும். நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி புரிவீர்கள் என்று கூறவும். இப்போது இந்த மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியினை வடி வமைப்பார்கள்.

3. 20:20:20 விதி: மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணி புரிந்து கொண்டிருந்தால், அதிக பட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட் களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்கு புத்துணர்வைத் தரும்.
பொதுவாக நிமிடத்திற்கு ஒருமுறை நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறை தான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை சிமிட்டவும்.
ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயாமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.

4.இதமான சூடு தேவை: கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண் களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

5. தண்ணீர் கொண்டு அடித்தல்: இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும். 

6. தேயிலை பைகள்: பயன்படுத்திய இரண்டு தேயிலை பைகள், அல்லது அந்த அளவில் மென்மையான மடிக்கப்பட்ட நனைக்கப் பட்ட துணியை, அலுவலகத் திற்குச் செல்கை யில் பிரிஜ்ஜில் வைத்து செல்லவும். பின்னர், அங்கிருந்து வந்த வுடன், அதனை எடுத்து, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்க வும். இது வேலை மிகுதியால், கண்களில் ஏற்படும் சிறிய வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.

7. வைட்டமின்கள்: ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடவும். 
நன்றி :தினமலர்  

Tuesday, April 10, 2012

உடல் உறுப்பு தானம் எப்படி செய்வது ?


``உடல் உறுப்பு தானம்'' " தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''


``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.
நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.

"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கம் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?''

"உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.


"உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?''


"ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.''


"இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''
                      
"இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).''

"யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?''


"நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.''


"உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?''

"18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.''


"உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?''


"ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன.'' 1954 ஆம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-

  1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.

    2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.


    3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.


    "தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?'

"பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தான் காரணம்.

ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் ``ப்ளாஸ்மா பெரிஸிஸ்'' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.''

"உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?''


"பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும்,


ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொம்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.

நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை.

ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.

ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது,

உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்கும் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.''

"வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?''


"கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.


ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.

ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.

எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம்.

ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.''

"ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?''


"ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன.


மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது.

பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன

நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.''

"உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?''

"உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள்.


கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது.

அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறைத்தும் போகக்கூடாது.

இதற்கென்று சில ரசாயன கலவைகம் உள்ளன. அவை ``வயாஸ்பான் திரவம்'', ``ïரோ கால்லின்ஸ்'' திரவம், ``கஸ்டோயியல்'' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன.

சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.''

"முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?''


"நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக ``அலெக்ஸில்'' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.''


1905 ஆம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.


1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.


1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் ``பாஸ்டன்'' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.


1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.


1960 ஆம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.

1963 ஆம் ஆண்டு ``கொலராடோ'' விலும்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.


1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் ``கேப்டவுன்'' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். ``டென்னிஸ் டார்வெல்'' என்பவரின் இதயத்தை ``லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி'' என்பவருக்கு பொருத்தினார்.


1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.


1983 ஆம் ஆண்டு ``சர். மாக்டியா கூப்'' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.


1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.


2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.


2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.

***
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?

சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - 5 மணி நேரம் வரை
இதயம்/ நுரையீரல் - 5 மணி நேரம் வரை
கணையம் - 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கம் வரை
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும்
பொதுவாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம்